சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், பெண்களுக்கென முதற்கட்டமாக 100 பிங்க் நிற ஆட்டோக்கள், 150 மஞ்சள், நீல நிற ஆட்டோக்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. . இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.