சென்னை:
மத்திய அரசு தேர்தலுக்காக நிறுத்தி வைத்திருந்த பெட்ரோல் டீசல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது.பட்ஜெட்டில் இதன் இரண்டு எரிபொருட்கள் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதலி வரி விதிக்கப்படும் என்று அறிவித்தாலும் மாநிலங்களில் உள்ள வரி உள்ளிட்ட மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னையில் கருத்து தெரிவித்த வீடுகளுக்க உணவுப்பொருள் விநியோகம் செய்யும் தொழிலாளி ஒருவர்,“ இந்த அரசாங்கத்தால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை இறக்கும்போது 10 பைசாஎன்ற வீதத்திலும் உயரும் பொழுது ரூபாய்கணக்கிலும் உள்ளது. இது எந்த விதத்தில் நியாயம் ஆகும். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.
மாணவர்
கல்லூரி செல்லும் மாணவர்கள் பெட்ரோல்விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற மோடி அரசு தமிழ்நாட்டில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம், பெட்ரோல் விலைஉயர்வு போன்ற மக்களை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை திணித்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார் ஒரு கல்லூரி மாணவர்.
ஆட்டோ தொழிலாளி
பெட்ரோல் விலை உயர்வால், வாகனத்தை வைத்து சம்பாதிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது. மக்கள் பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று தேர்தலின் போது சொன்னாங்க. ஆனால் அதை மறந்து இப்போது பெட்ரோல் விலையை உயர்த்திட்டாங்க என்று இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கூறினார்.