tamilnadu

செல்லப் பிராணிகளுக்கு உரிமம்: 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்!

சென்னை, மே 13- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2 ஆயிரத்து 300 பேர் விண்ணப் பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை உரிய றையில் பரிசீலித்து உரிமம் வழங்கு வதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக கூறப்படு கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், மண்டல வாரியாக அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 3 நாட்களில் 2 ஆயிரத்து 300 பேர்  செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு அனுமதி கோரி சென்னை மாநகராட்சியில் விண்ணப்பி த்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து அனுமதி வழங்கு வதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டு புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று மாந கராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத் தப்பட்டுள்ளது. மேலும், மண்டல வாரியாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை  கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை யும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 4-வது லேன் பகுதியில் உள்ள  சென்னை மாநகராட்சி பூங்காவில் விளை யாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த வாரம் 2 நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலத்த காயமடைந்த அச்சிறுமி ஆயிரம்  விளக்கில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம் என்பது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரி வித்திருந்தார். மேலும், செல்லப்பிரா ணிகளை வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

;