tamilnadu

img

ஒரே இணையதளத்தில் 5 சேவைகள்: மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

சென்னை, ஆக. 29 - தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்துச் சேவைகளும் 100 விழுக்காடு டிஜிட்டல்மய மாக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அரசு அலு வலகங்களுக்கு நேரடியாக வராமல், இணையதளம் மூலம் பொதுமக்கள் அனைத்து சேவைகளையும் எளிதாக பெற முடிகிறது. 

குறிப்பாக, https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெறலாம். 

முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின், அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் - அதிகாரிகள் இடையே மூன்றாம் நபர் தலையீடு இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். 

அதன் அடிப்படையில், சுய சான்றிதழ் முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் நிறு வனங்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக நிலம் தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒருங்கி ணைத்து வழங்க ஒருங்கி ணைந்த நில சேவை இணை யதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் நிலம் மற்றும் அது தொடர்பான பிற சேவைகள் அனைத்தும் தனித்தனி இணையதளங்களில் சென்று பார்க்க வேண்டி யுள்ளது. உதாரணமாக பத்திர பதிவு விவரங்களை பத்திரப்பதிவு துறையின் இணைய பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும். அதேபோல் பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கு சொத்து வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம் அறிய தனி இணையதளம் என ஒவ்வொரு இணையதள பக்கம் சென்று பார்க்க வேண்டும்.

எனவே தமிழக அரசு, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற இணைய தளத்தை வடிவமைத்து உள்ளது. இந்த இணைய தளத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் பட்டா-சிட்டா மற்றும் வரைபட விவரங்கள், பத்திர பதிவு விவரங்கள், நிலம் தொடர்பான நீதிமன்ற மற்றும் வருவாய் துறை வழக்கு விவரங்கள், மின் இணைப்பு மற்றும் கட்டண விவரங்கள், சொத்து-குடிநீர்  வரி விவரங்கள் என  அனைத்தையும் ஒருங்கி ணைந்து மிக எளிதாக பார்க்கலாம். முற்றிலும் தொழில் துறையினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம்  பொதுமக்கள் பலன் அடைய லாம்.

இந்த இணையதளம் இன்னும் முழு அளவில் செயல்பாட்டுக்கு வர வில்லை. அதில் உள்ள  பத்திரப்பதிவு உட்பட சில சேவைகள் செயல்பட வில்லை. 

இன்னும் ஒன்று  அல்லது இரண்டு மாதங் களில் பொதுமக்கள் இதில்  முழு அளவிலான சேவை களை பெற முடியும் என்றும், அதில் சேவைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அதி காரிகள் கூறுகின்றனர்.