சென்னை, ஆக. 20 - அரசாணையின் படி, நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்.
அவர்கள் பிற மொழி யை பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அந்த பெயர்ப் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும். இதனை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் மற்றும் தமிழ் வளர்ச்சி செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகி யோர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த இரு துறைகளின் சார்பில் கூட்டாக மாதம் இருமுறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதையும் மீறி பிற மொழியில் மட்டும் பெயர்கள் இருந்தால் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இப்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.