tamilnadu

img

செப்.16-ல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை,ஆக.30- பாபநாசம், சேர்வலாறு, மணி முத்தாறு நீர்த்தேக்கங்களில் செப்டம் பர் 16 முதல் 46 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள பயிர் களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவை களுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங் களிலிருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால் வாய்களின் கீழூள்ள வாழை பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைகளுக்காக வும், சிறப்பு நிகழ்வாக, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நாளொன் றுக்கு 1,400 கன அடி / விநாடி வீதமும் மற்றும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12 ஆயிரத்து 500 ஏக்கர்) மற்றும் கோடகன் கால்வாய் (6,000 ஏக்கர்) ஆகியவற்றின் கீழுள்ள 24 ஆயிரத்து 90 ஏக்கரில் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளில் பகுதியாக கார்பருவ சாகுபடியில் பயிரிடப்பட்ட பயிர்களை காக்கும் பொருட்டும், சிறப்பு நிகழ்வாக, செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 46 நாட்களுக்கு நாளொன் றுக்கு 800 கன அடி/விநாடி வீதமும் ஆக மொத்தம் 4,993.92 மி.கன அடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வ லாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த் தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட் டம், அம்பாசமுத்திரம், சேரன்மகா தேவி, திருநெல்வேலி மற்றும் பாளை யங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவை குண்டம், ஏரல், தூத்துக்குடி மற்றும் திருசெந்தூர் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை கள் பூர்த்தி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள் கிறேன். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற் கொண்டு உயர் மகசூல் பெற வேண் டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.