சென்னை,ஜூன் 8- சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் பரத்துக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஆத்தி நாடு ஊராட்சியிலுள்ள தோனூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவர் பச்சமலையில் தனது ஊராட்சிக்குட்பட்ட சின்னஇலுப்பூரிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு எமது வாழ்த்துகள்! உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள். என பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.