tamilnadu

img

டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட உத்தரவு  

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் உள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் பார்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ நடத்த அனுமதியில்லை. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி என உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் கூறியுள்ளார்.  

அதனைதொடர்ந்து பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. மேலும் டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்து, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.