tamilnadu

img

பட்டா வழங்கக் கோரி சாலையில் சமைத்து பட்டியலின மக்கள் போராட்டம்

பட்டா வழங்கக் கோரி சாலையில் 
சமைத்து பட்டியலின மக்கள் போராட்டம்

யலின மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி சாலையில் சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டியை  அடுத்த அங்கு செட்டிபாளையம் புதுநகர் பகுதி யில் பட்டியலினத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பம் அரசுக்கு சொந்தமான இடத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வரு கின்றன. எனவே, அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த தாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆக்கிர மிப்பு என்ற பெயரில் வீடுகள் அகற்றி பட்டா தருவதாக அதிகாரிகள் கூறியுள்ள னர். அதை நம்பி கடந்த மாதம் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் முன்னிலையில் வீடு களை இடித்து அகற்றி னர். ஒரு மாதமாக பட்டா கேட்டும் வழங்கா மல் ஏமாற்றி வருகின்றனர். இதனால், கோப மடைந்த மக்கள், அதே பகுதியில் கொட்டகை அமைத்து தங்கியிருந்த நிலை யில், வெள்ளிக்கிழமை (பிப்.28)  இரவு பெய்த திடீர் மழையால் கை குழந்தைக ளுடன் அவதிப்பட்டனர். இதனால் ஆத்திர மடைந்த அந்த மக்கள் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுப்பு வைத்து உணவு சமைத்தும், மாணவர்கள்  புத்தகங்கள் கையில் வைத்து படித்தும் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதை யடுத்து, ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரி கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  பேச்சு நடத்தினர்.