tamilnadu

img

சிறப்பு ஊதிய உயர்வு பெருக்கத்தை வழங்கிடுக சென்னையில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணாc

சென்னை,டிச.11- கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சிறப்பு ஊதிய  உயர்வு பெருக்கத்தை வழங்கக்கோரி  புதனன்று (டிச.11) சென்னை மத்திய கூட்டு றவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பிராட்வேயில் தர்ணா நடைபெற்றது.

ஊதிய உயர்வு ஒப்பந்தங்களின்போது இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊதிய  உயர்வு பெருக்கத்தை 01.01.2021 முதல் வழங்க வேண்டும், கடந்த 2ஆண்டின் புத் தாண்டு வெகுமதியை உடனடியாக வழங்க வேண்டும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டு றவு வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகைப்படி, நகரப்படிக்கு இணையாக சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் களுக்கும் வழங்க வேண்டும், மாநில, மாவட்டஆள்சேர்ப்பு நிலையம் பணி வழங்கப்பட்ட ஊழியர்களின் பணிமூப்பு பட்டி யலை மதிப்பெண்களோடு வெளியிட வேண்டும்,

3ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர் களுக்கு அவர்களின் கோரிக்கை கடிதத் தின் அடிப்படையில் பணியிட மாறுதல்கள் வழங்க வேண்டும், வங்கி வளர்ச்சி சம்பந்த மாக சங்கம் கொடுத்த முன்மொழிவுகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கவுரவத்தலைவர் எம்.  ராஜகேசி தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநிலத்தலைவர் தி. தமிழரசு போராட்டத்தை துவக்கி வைத்தார்.

 சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தலைவர் டி. எட்வர்ட் ஜான்  ராஜா, பொதுச்செயலாளர் ஜெ. சந்திரகுமாரி பொண்ணுத்தாய், துணைப்பொதுச் செயலாளர் கே. ஸ்டாலின், பொருளாளர் எஸ்.செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்,  பெபி துணைத்தலைவர் என்.ராஜகோபால் வாழ்த்தியும் சம்மேளனத் தின் பொதுச்செயலாளர் இ. சர்வேசன் நிறைவு செய்தும் பேசினார்.