tamilnadu

பெண் குழந்தை காப்பகங்களை கண்காணிக்க வேண்டும்

சென்னை,செப்.24- நாகப்பட்டினம் மாவட்டத்தில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ள நிலையில், பெண்  குழந்தைகள்  காப்பகங் களை மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் கண் காணித்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு:

நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தன் பேட்டை யில் அன்னை சத்யா அரசு பெண்கள் காப்பகத்தில் மனநல ஆலோசகர் சத்திய பிரகாஷ் என்பவர் அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கு சுனாமியில் தாய் அல்லது தந்தையை இழந்த வர்களும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளும்   65- க்கு மேற்பட்டோர் இருந்து வருகின்றனர்.

இவர்கள் காப்பகத்திற்கு அருகில் இருக்கும் பள்ளி களில் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

காப்பகத்தின் கண்கா ணிப்பாளராக சசிகலா என்ப வர் பணிபுரிந்து வருகிறார்.  காப்பகத்தில் உள்ள குழந் தைகளுக்கு மனநல ஆலோ சனை வழங்குவதற்காக இரண்டு ஆண்கள், ஒரு பெண் என மூன்று  பேர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

இதில் சத்யபிரகாஷ் என்ற மனநல ஆலோசகர் 5  சிறுமிகளுக்கு தொடர்ச்சி யாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விடுதி கண்காணிப்பாளர் சசிகலா கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்யபிரகாஷ்  போக்சோ சட்ட பிரிவுகளின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பெண் குழந்தை களுக்குக்கான விடுதிகளை மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் கண்காணித்திட வேண்டும். 

இது போன்ற விடுதி களில் குழந்தைகளுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கிட அரசே  மன ஆலோசகர்களை நியமித்திட வேண்டும். 

பெண் குழந்தைகள் காப்பகங்களில் போக்சோ  சட்டம் குறித்தானவிழிப்புணர்வு முகாம்களை நடத்திட வேண்டும். 

தற்போது போக்சோ வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள சத்ய பிரகாஷ் மீது கடுமையான தண்ட னையை உறுதிப்படுத்த உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடாமல் மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.