சென்னை,செப்.29- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலை வர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகி யோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
2023ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்குத் தேர் வான நூல்கள், ஆளுமைகள் விவரத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளு மைக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட் டளை விருது எழுத்தாளர் ராஜ் கெளத மனுக்கு விருதுத்தொகை ரூ.1 லட்சத்து டன் வழங்கப்படுகிறது.
தேர்வாகியுள்ள நூல்/ குறும்படம்/ ஆவணப்படம்/ ஆளுமைக்கு சான்றிதழு டன் விருதுத்தொகை ரூ.10 ஆயிரம் 2024 டிசம்பரில் ஈரோடு நகரில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார் நூல் சிலப்பதி காரமும் கண்ணகி வழிபாடும் எழுதிய ப.ஜெயகிருஷ்ணனுக்கும் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது : நாவல் பற்சக்கரம் எழுதிய எஸ்.தேவிக்கும் சு.சமுத்திரம் நினைவு விருது : விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பான ஊருக்கு ஒரு குடி எழுதிய ஜூலியஸ்க்கும் வழங்கப்படுகிறது.
இரா. நாகசுந்தரம் நினைவு விருது : அல்புனைவு ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் எழுதிய இரா. செங்கொடி க்கும், வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது : கவிதைத்தொகுப்பு அனலிக்கா – ச. ப்ரியாவுக்கும், அகிலா சேதுராமன் நினைவு விருது : சிறுகதைத்தொகுப்புபசி கொண்ட இரவு எழுதிய கி.அமுதா செல்விக்கும் வழங்கப்படுகிறது.
வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு-பாலைச்சுனை- தீபேஷ் கரிம்புங்கரை. தமிழில் சுனில் லால் மஞ்சாலும்மூடு. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது : குழந்தைகள் இலக்கிய நூல் இதிரா எழுதிய ஜோதி விஜேந்திரன், கு.சின்னப்பபாரதி அறக்கட்ட ளை விருது : மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் இலக்கிய மீளாய்வு எழுதிய தேமொழிக்கும்
பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் ஹோம் - மீனாட்சி சுந்தருக்கும் என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது : ஆவணப்படம்- பெரும்பாக்கம் – சஞ்சய் ரித்வானுக்கும் மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது :
நாட்டுப்புறக் கலைச்சுடர் பானு ராஜரெத்தினம் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது.
மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது : இசைச்சுடர் கிடாக்குழி மாரியம்மாள், த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர் எம்.எஸ்.காந்தி மேரி, மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது : பெண் படைப்பாளுமை அ.வெண்ணிலா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.