சேனலை முடக்க பரிந்துரை
கந்த சஷ்டி கவசம் தொடர்பாக வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கறுப்பர் கூட்டம் இணையதள சேனலைத் தடை செய்யுமாறு யூடியூப் நிர்வாகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தடுப்பு மருந்து விநியோகத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துவங்கி வைத்தார்.
யானை தந்தம் திருடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி உரிகம் காப்புக்காட்டு பகுதி பிலிக்கல் என்ற வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண்யானையை கொன்று, மர்ம நபர்கள் அதன் தந்தத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒப்படைப்பு
கடலூர் மாவட்டம் சோனங்குப்பம் பகுதி மீனவர்கள் தங்களிடம் உள்ள ஆழ்கடல் சுருக்கு வலை மற்றும் எஸ்.டி.பி. படகுகளை மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சாலை மறியல்
கீழ் அருங் குணம் ஊராட்சி மன்றத் தலைவர் சுபாஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கடலூர் அரசு மருத்துவமனை அருகே அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தீ விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொத்த ஜீவூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவருக்கு சொந்தமான பூத்தோட்ட கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாயப் பொருட்கள் மற்றும் பூக்கள் எரிந்து நாசமானது.
அலுவலகம் மூடல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் உட்பட 4 ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன.