tamilnadu

நீட் தேர்வு: தமிழக அரசு கடிதத்திற்கு பதில் வரவில்லை: அமைச்சர்

சென்னை, ஜூலை 16- நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடி தத்திற்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை என்று சுகா தாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், எழும்பூர் மருத்துவமனையில் 400 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு, 374 பேர் குணமடைந்துள்ளனர். இந்த மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவ தும் ஆயிரத்து 606 கர்ப்பிணிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆயிரத்து 104 பேர் குணமடைந்துள்ளனர் என்றார். மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்விலிருந்து இந்தாண்டு  தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதத்  திற்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை என்றும் அவர் கூறினார்.