ஆம்பூர், பிப். 12- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி வேதியியல் துறை சார்பில் “வேதியியல் பட்ட தாரிகளின் வேலை வாய்ப்பு கள்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் கல்விக் கழ கத்தின் பொதுச் செயலாளர் கனி முஹம்மது அஜ்ஹர் தலைமையில் நடைபெற் றது. கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.ராஜா முஹம் மத் காமில் வரவேற்றார். இஸ்லாமிய கல்விக் கழ கத்தின் முறைசாரா கல்வி இயக்குனர் மேஜர் சையது சகாபுதீன், பெங்களூருவி லுள்ள ‘பயோ ஜெனரியோ’ நிறுவனத்தின் துணைத் தலைவர் வேல்முருகன் சண் முகம், பயோகான் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனை வர் டி.முஹம்மத் இலியாஸ், திருவள்ளுவர் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பேராசிரி யர் லியாக்கத் அலி, பேராசி ரியர் ஆனந்த ரட்சகன் உள் ளிட்ட பல்வேறு கல்லூரி களைச் சேர்ந்த வேதியியல், உயிர் வேதியியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.