tamilnadu

img

காவல்துறைக்கு நவீன இருசக்கர வாகனங்கள்

சென்னை, ஜூலை 24- காவல்துறையை நவீனப்படுத்  தும் திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு அதிநவீன வாகனங்கள் தொட ர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. 

கடந்த 1 மாதத்திற்கு முன்பு  காவல்துறையினருக்கு 4 சக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து புதனன்று (ஜூலை 24) ரூ. 74.08 லட்சம் செல வில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய மேலும் 85  இருசக்கர வாகனங்களின் செயல் பாட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதன்படி, ஆண் காவலர்க ளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்து டன் கூடிய பல்சர் வாகனங்களும், பெண் காவலர்களுக்கு டிவிஎஸ் ஜூபிடர் வாகனங்களும் வழங் கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை

மேலும், இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் ரூ. 35.57 கோடி  மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.  20.53 கோடி மதிப்பீட்டிலான முடி வுற்ற திட்டப் பணிகளை திறந்து  வைத்தும், ரத்தின கிரீஸ்வரர் கோயி லில் ரூ. 9.10 கோடி மதிப்பீட்டிலான கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தும், செயல் அலுவலர் பணி யிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட  10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, மதுவிலக்கு மற்  றும் ஆயத்தீர்வைத் துறை கூடு தல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்கு  நர் சங்கர் ஜிவால், சென்னை பெரு நகர காவல் ஆணையர் அருண், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.