tamilnadu

மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்தை 2026 க்குள் முடிக்கத்திட்டம்

சென்னை, ஜூன் 16- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஐந்தாவது வழித்தடத்தில் ஆதம்பாக்கம் மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரு கிறது. இந்த வழித்தடத்தில் மொத்த பணிகளும் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்போது முதற்கட்டமாக இரண்டு வழித்தடங்களில் சுமார் 54 கி.மீ. தூரத்திற்கு செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த இரண்டு வழித் தடங்களிலும் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்பவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் மூன்று வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவிற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரையிலான ஐந்தாவது வழித் தடம் 44.6 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. மாத வரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் வரை உயர்மட்ட பாதையாக அமைக் கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே மேம்பால ரயில் பாதை இருந்தால் அருகில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் வகையில் பணிகள் நடை பெற்று வருகிறது.

 இந்த நிலையில் ஆதம்பாக்கம் மேம்பால ரயில் பாதைக்கு மேல் மெட்ரோ ரயிலுக்கான உயர்மட்ட பாதை அமைப்பதற்காக 20 மீட்டர் உயரமான பிரமாண்ட தூண்களும் அதில் பாலம் அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகை யில், “பயணிகள் வந்து செல்ல வசதி யாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் அடிப்படை வசதிகள் மேம் படுத்தப்படுகிறது” என்றனர்.

மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை யிலான வழித்தடத்தில் பரங்கிமலை ஆதம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணி கள் வந்து செல்ல வசதியாக நகரும் படிக்கட்டுகள், நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மொத்த பணிகளும் 2026 ஆம்  ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள் ளது” என்றும் கூறினார்.