மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மேம்பாட்டு நிதியிலிருந்து வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் எஸ்.ஸ்டாலின், எஸ்.ராஜேந்திரன் ஆகியோருக்கு சிபிஎம் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன் முன்று சக்கர வாகனத்தை வெள்ளியன்று (ஜூலை12) வழங்கினார். குக்ஸ்சாலையில் உள்ள ஏபி நினைவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், கி.ராதை, மனோகரன், நடராஜன், ராஜி, முரளி, முருகன், பாப்பு, நாகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.