சென்னை,அக்.15 ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற 45வது உலக திறன் போட்டியில் ஆபரண கைவினைத் திறனுக்காக சென்னையை சேர்ந்த சஞ்சய் பிராமானிக் வெண்கலப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து ள்ளார். இதற்காக அவரக்கு சென்னையில் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் சார்பில் பாராட்டு விழா நடத்த ப்பட்டது.இந்த நிறுவனத்தில் நகை வடிவமைப்பாளராக பணியாற்றும் பிரா மானிக் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். 8ஆம்வகுப்பு வரை படித்தாலும் நகை களை அழகாக வடிவமை ப்பதில் திறமை மிக்கவர். இவரது திறமையை அறிநது கொண்ட உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் அவருக்கு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு கவுன்சில் மூலமாக மேலும் பயிற்சி அளித்து இந்த போட்டியில் பங்கேற்க வைத்தது. பிரேசில், நியுலாந்து, சிங்கப்பூர் உள்பட பல முன்னணி நாடுகளை தோற்கடித்து 3வது இடத்தை பிடித்து சஞ்சய் பிராமானிக் வெண்கலப்பதக்கம் வென்றார். சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்ற 63 நாடுகளில், இந்தியா 13-வது இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இளம் சாதனையாளரை பாராட்டுவதற்காக நடை பெற்ற நிகழ்வில் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிர்வா அமரேந்திரன் உம்மிடி, ஜேம் ரூஜூவல்லரி ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியா வின் செயல் இயக்குனர் ராஜிவ் கார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.