tamilnadu

img

குடிநீர் கேட்டு மாதர்சங்கம் சாலை மறியல்

சென்னை, மே 17- எர்ணாவூரில் குடிநீர் கேட்டு வியாழ னன்று பெண்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். திருவொற்றியூர் 4ஆவது வார்டு எர்ணாவூரில் கடந்த 5 நாட்களாக மெட்ரோ குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் 4 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக லாரி மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதையடுத்து அனை வரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  

இந்தப் போராட்டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், பகுதி செயலாளர் கஸ்தூரி,  சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக்குழு உறுப்பினர் செல்வகுமாரி, பகுதிக்குழு உறுப்பி னர்கள் அலமேலு, கே.கே.புஷ்பா, நிர்வாகிகள் ஆறுமுகம், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;