tamilnadu

சென்னை, திருவண்ணாமலை , மதுரை முக்கிய செய்திகள்

தலைமைச் செயலக பெண் அதிகாரியிடம் செயின் பறிப்பு
சென்னை, டிச.5- சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், ஜோதி நகரைச் சேர்ந்தவர் சுசிலா (57). இவர் சென்னைதலைமைச் செயலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர் புதனன்று வேலை முடிந்து மாநகரப் பேருந்து மூலம் சிட்லம்பாக்கம் வந்திறங்கினார்.  பின்னர் அங்கிருந்து ஜோதி நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், சுசிலாவை வழிமறித்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சுசிலா சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லாரி மோதி வாலிபர் பலி
படப்பை, டிச.5- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்தமடம் கிராமம் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் செல்வகுமார் (26). இவர் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த விநாயக மூர்த்தி என்பருடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற லாரி ஒரகடம் அருகே வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வ குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விநாயக மூர்த்தி படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராப்பூர் அணுமின் நிலையம் எரிபொருள் ஒப்பந்தம் நிறைவு 
சென்னை, டிச. 5 ரஷ்ய அரசு அணு மின் கழகமான ரொசாட்டத்தின் துணை நிறுவனமாகிய டிவெல் அணு உலைகளுக்கான எரிபொருள் துகள் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் அணு மின் உற்பத்தித் துறையுடன் செய்துகொண்ட நீண்ட கால ஒப்பந்தப்படி, தனது இறுதி எரிபொருள் சப்ளையை, தற்போது இது நிறைவு செய்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த ஒட்டு மொத்த சப்ளையின் மூலம், மொத்தமாக 50 டன் அணு உலை எரிபொருளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. சிறு உருண்டை வடிவில் உள்ள இந்த எரிபொருள் ரஷ்ய  நாட்டின், மாஸ்கோ நகருக்கு அருகே உள்ள எலக்ட்ரோஸ்டால் என்ற இடத்தில், டிவெல் நிறுவனம் அமைத்துள்ள டிவெல் எரிபொருள் உற்பத்தி கூடத்தில்தயாராகிறது. இதற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் டையாக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த எரிபொருள் துகளைக் கொண்டு, தாராப்பூர் அணு மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான எரிபொருள் குழாய்கள் ஹைதராபாத் நகரில் உள்ள தேசிய எரிபொருள் வளாகத்தில் தயாரிக்கப்படு கின்றன.

பெண்குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு தகவல்கள்
சென்னை, டிச.5 பள்ளி செல்லும் பதின் பருவ பெண் குழந்தைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 5-வது மிகப் பெரிய மாநில மாகத் திகழ்கிறது மஹிந்திரா மஹிந்திரா நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் நான்`ஹி காலி திட்டத்தின் பதின் பருவ பெண்கள் ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் 30 மாநிலங்களில் 600  மாவட்டங்களில் 74 ஆயிரம் பதின் பருவப் பெண் குழந்தை கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட முதல் மற்றும் மிகப் பெரிய ஆய்வு இதுவாகும். தமிழ்நாட்டில் 13 முதல் 19 வயது வரையுள்ள 99.2 சதவீத இளம் பெண்கள் கல்வி நிறுவனங்க ளில் படித்து வருகின்றனர். 2016-17 ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2018-ல் வெளியிடப்பட்ட டிஏஜி அறிக்கை – 2018-ன் படி பதின்பருவப் பெண்களுக்கு, மாதவிலக்கின்போது சுகாதார மான முறையில் பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. பதின் பருவப் பெண்கள் மாதவிலக்கின்போது பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றுவதில் மற்ற இந்திய நகரங்களை விட சென்னை முன்னணியில் உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, உள்ளிட்ட நகரங்களைக் காட்டிலும் சென்னை இதில் முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.

கஞ்சா விற்ற இருவர் கைது
மதுரை, டிச.5- மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மில்கேட் பகுதி யில் கஞ்சா விற்பனை செய்த தமிழ்ச்செல்வன் என்பவரை மேலூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமி ருந்து 1.300 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கோட்ட நத்தாம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜா என்பரை கைது செய்த கீழவளவு காவல்துறையினர் அவரி டமிருந்து 1.250 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.