tamilnadu

img

தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தேனி மாவட்ட எம்.பி ரவீந்திரநாத் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத், ஓட்டிற்கு காசு கொடுத்து அதன் மூலம் வெற்றி பெற்றதாகவும், சொத்து விவரங்களை மறைத்ததாகவும்  வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில் தேனி தொகுதியின் எம்.பி ரவீந்திரநாத் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

;