சென்னை, ஜூலை 7- சென்னையில் நடை பெற்ற மகளிர் கார் பேரணி இந்த ஆண்டு 'மெட்ராஸ் - மெட்ராஸ்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஞாயிறன்று (ஜூலை 7) நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சவேரா ஹோட்டல் வளாகத்தில் 23வது கார் பேரணியை ஹோட்டல் நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ்.எம்.வைத்யா, செயல் இயக்குநர் எம்.சுதாகர், நடிகர் அருண் விஜய், நடிகை சுஹாசினி மணி ரத்னம் ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்த னர்.
சுமார் 50 முதல் 65 கிமீ தொலைவு நடை பெற்ற இந்த பேரணி, சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்குச் சென்று, பின்னர் மீண்டும் சவேரா ஹோட்டலை வந்த டைந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் 'மெட்ராஸ் - மெட்ராஸ்' என்ற தீம்க்கு ஏற்ப மடிசார் புடவை, வேட்டி சட்டை, லுங்கி மற்றும் ரெட்ரோ உடைகளை அணிந்த வாறு காரை ஓட்டினர். இந்த பேரணியில் 100 கார்கள் பங்கேற்றன. போட்டி விதிகளின் படி, ஒவ்வொரு காரிலும் 4 பேர் இடம் பெற்றனர்.
ஒருவர் காரை ஓட்ட, மற்றொரு வர் வழிகாட்டி, மற்ற இருவரும் விநாடி-வினா போட்டிக்கான விடைகளை தேடினர். மேலும், பேரணி யில் செல்லும் காரின் வேகம் 30 முதல் 40 கி.மீ தாண்டக்கூடாது. ஜிபிஎஸ் கேமரா செயலி மூலம் செல்லும் இடங்களின் புகைப்படத்தை அனுப்பு வது உள்ளிட்ட கட்டுப்பாடு களும் இந்த விளையாட்டில் இடம்பெற்றிருந்தன. சுமார் 2.5 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேரணியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் ஓர் அணியாக சேர்ந்து விளை யாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு போட்டிக்கான விதிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. முதல் பரிசு பெற்றகார் தேசிய அளவிலான பேரணி யில் கலந்து கொள்ள உள்ளது.