tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எம்.சரஸ்வதி எம்சி  மகள்  அகால மரணம்

சென்னை, ஏப். 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், 123வது வார்டு கவுன்சிலருமான எம்.சரஸ்வதியின் மகள் தமிழ்மொழி செவ்வாயன்று (ஏப்.15) அகால மரணமடைந்தார். அவருக்கு வயது 29. விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வனஜகுமாரி,  செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், ம.சித்ரகலா, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் ப.ஜெயவேல், விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாதர் சங்க மாநில பொருளாளர் வ.பிரமிளா, மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் புதனன்று (ஏப்.16) முண்டியம்பாக்கம் முக்தி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கட்டுமான பொருட்களின் விலை  உயர்வை கட்டுப்படுத்தக் கோரிக்கை

சிதம்பரம், ஏப் 13- சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் காட்டுமன் னார்கோயில் வட்ட மாநாடு காட்டுமன்னார்கோயிலில் நடை பெற்றது.   மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் என்.இளங்கோ வன் தலைமை தாங்கினார்.  வட்டச் செயலாளர் எஸ்.காளி தாஸ் அனைவரையும் வரவேற்றார்.  மாநாட்டை சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.துரைசாமி துவக்கி வைத்து பேசினார்.  கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் எஸ்.கார்த்திகேயன், துணைச் செயலாளர் என்.ஜெய சீலன்,  மாவட்ட துணைத் தலைவர் ஆர்.திருஞானம்,  விவசாய  சங்க வட்டச் செயலாளர் எம். ஜாகிர்உசேன்,  வட்டத் தலை வர் எம்.ஜி.தனபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.  கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பி. கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார்.  மாநாட்டில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் புகழேந்தி, ரவி, கார்த்தி, உஸ்மான், சகாயராஜ், செல்வகுமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் புதியதாக  20 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. குழு ஒருங்கிணைப்பாளராக என்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும், சிமெண்ட், எம்.சாண்ட், பி.சாண்ட், செங்கல், ஜல்லி, கம்பி, மரம், பெயிண்ட், எலக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொன்னேரியில் இடியுடன்  கனமழை மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர், ஏப்.16- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதனன்று (ஏப் 16), இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். பொன்னேரி பேருந்து நிலைய பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரயில் மோதி ஒருவர் பலி

கடலூர், ஏப்.16- பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ரயில்வே கேட் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற கடலூர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.