tamilnadu

img

கிருஷ்ணகிரியில் லாக்-ஆப் மரணம்: காவல்துறைக்கு சிபிஎம் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி,செப்.13- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி வட்டம் புளியாண்ட பட்டி தலித்  இளைஞர் மதன்குமாரை செப்.5 அன்று விசாரணைக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல் துறையினர், செப். 8 அன்று  இறந்து விட்டதாக தகவல் கூறியுள்ள னர். மதன்குமாரை காவல்நிலையத்தி லேயே அடித்து கொன்றுவிட்டதாகக் கூறி உறவினர்களுடன் பெற்றோர்  போராட்டம் நடத்தினர். இந்த தகவல றிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து, மதன்குமா ரின் மரணத்திற்கு நீதி கேட்டு செப்.13  வெள்ளியன்று ஊத்தங்கரை மருத்துவ மனை அருகில் தர்ணா போராட்டம் நடத்தினர். வட்டச் செயலாளர் மகா லிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டச்  செயலாளர்  எஸ்.ஆர். ஜெயராமன், மாநி லக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், நஞ்சுண்டன், கோவிந்த சாமி ஆகியோர் கண்டன உரையாற்றி னர்.

 மாவட்டக் குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, பாஞ்சாலராஜன், வட்டக் குழு உறுப்பினர்கள் தண்ட பாணி, கிருஷ்ணன், மைதிலி, பொன்னு சாமி, சபாபதி, விஜயகுப்பன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர். சிங்காரப் பேட்டை பகுதிச் செயலாளர் எத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒருவரை கைது செய்வதற்கு முன் அவரின் உறவினர் யாரிடமாவது தெரி விக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை துளியும் மதிக்காமல் விசா ரணை என்ற பெயரில் இரண்டு நாட்கள்  காவல்நிலையத்தில் வைத்து கொடு மைப்படுத்திய காவல்துறைக்கு தலை வர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையினர் தாங்கள் செய்த  குற்றங்களை மறைப்பதற்காக  மதன் குமாரின் குடும்பத்தை மிரட்டி, கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கட்டப்  பஞ்சாயத்து செய்து வருவதையும்,  தடயங்களையும் மறைக்க குறுக்கு வழி களையும் கையாண்டு வரும் காவல்  துறைக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தோடு நீதி கிடைக்கும் வரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவோம் என்றும் கூறினர். மதன்குமாரின் மரணத்திற்கு காரண மான காவலர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண் டும், தடயங்கள் அனைத்தையும் அழிக்க முயற்சிப்பதை தடுக்க வேண்டும், சிபிசிஐடி மூலம் தீவிர விசா ரணை நடத்த வேண்டும், மதன்குமார் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் குடும்ப நிதி  வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.