சென்னை, டிச.23 - மிக்ஜம் புயல் கனமழை யால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே திருநெல்வேலி உள்ளிட்ட 4 தென் மாவட்டங் களில் பெய்த கன மழையால் மக்கள் பெருமளவு பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். 100 ஆண்டு களில் இல்லாத வகையில் கன மழை பெய்ததால் தென் மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது.
இந்த சூழலில் சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது, தமிழ் நாட்டின் வரலாறு காணாத மழையை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறிய தோடு, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும் முதல மைச்சர் பிரதமரை சந்தித்தது குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார்.
நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்கும் நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா” கூட்டணி உருவாக்கி வரும் அரசி யல் பேரலைகளை கண்டு ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அரண்டு போய் பிதற்றி வருகிறார் என்று கூறியுள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ள சேதாரத்தை தமிழ்நாடு அரசு சீர்படுத்தி வரும் நேரத்தில், அதற்கு தேவையான பேரிடர் கால நிதியுதவி செய்து உதவும் மனிதாபிமானம் எள் அளவும் இல்லாமல், மலிவான அரசியல் ஆதாயம் தேடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்களை கண்டித்துள்ளார்.
தொல். திருமாவளவன்
செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “ ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க மாட்டோம் என பேசி யுள்ளார். இப்படி கூறுவது, நிதிய மைச்சருக்கான அதிகாரமா? என்ற கேள்வி எழுகிறது. நிர்மலா சீதாராமன் தன்னை தானே பிரத மராக எண்ணிக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என்றார்.
திமுகவிற்கு எதிராக பேசுவ தாக நினைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் வரு கிற 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தூக்கி எறிவதே ஒரே தீர்வு என்றும் அவர் தெரிவித்தார்.