tamilnadu

img

வழக்கறிஞர் படுகொலைக்கு கண்டனம்

வழக்கறிஞர் கவுதம் ஜூன் 11 அன்று திருவான்மியூரில் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர கோரியும் வியாழனன்று (ஜூன் 13) உயர்நீதிமன்ற வாயிலில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.