tamilnadu

img

கோடைவெயிலில் ஒரு மாதகாலம் மோர் வழங்கிய சிபிஎம் ஊழியர்களுக்கு பாராட்டு

சென்னை, ஜூன் 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் ஒரு மாதமாக மோர் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று (ஜூன் 5) நிறைவுபெற்றது.

மாமேதை கார்ல் மார்க்சின் 206வது  பிறந்த நாள் மே 5ந் தேதி கொண்டாடப் பட்டது. இந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மார்க்சிஸ்ட் கட்சியின் தரமணி  தந்தை பெரியார் நகர் கிளை திட்டமிட்டது.  இதற்காக கிளை உறுப்பினர் பொண்ணு வேல் தலைமையில் ராஜேந்திரன், ராம மூர்த்தி, குமரேசன், லாரன்ஸ் ஆரோக்கிய சகாயராஜ், கார்த்தி, பாலன் உள்ளிட்டோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு மே 5ந் தேதி தொடங்கி ஜூன் 5ந்  தேதி வரை ஒரு மாத காலமாக தினசரி நண்பகல் நேரத்தில் மக்களுக்கு மோர் வழங்கி வந்தது. இந்த நடவடிக்கை பொது  மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பணியை பாராட்டி அப்பகுதியை சேர்ந்த 15  பேர் தாமாக முன்வந்து இதற்கான உதவிகளை செய்தனர்.

இந்த நிகழ்வின் நிறைவு நிகழ்ச்சியில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, மூத்த தலைவர் எஸ்.குமார தாசன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு மோர், பழங்களை வழங்கினர்.  இந்த பணியில் ஈடுபட்ட கட்சி ஊழியர்களை பாராட்டி கவுரவித்தனர்.

;