சென்னை, அக்.13- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்து டன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தர விட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.