tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘குரங்கு அம்மை தடுப்பு  நடவடிக்கை தீவிரம்’

சென்னை, செப்.3- தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26 ஆயிரம் பயணி களுக்கு சோதனை நடைபெற்றது. தமிழ் நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை இவ்வாண்டு 11 ஆயி ரத்தை கடந்துள்ளது.  குரங்கம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை கிண்டி கிங் நிறுவனத்தில் குரங்கம்மை நோய்க்கு பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒசூரில் டிராக்டர்  தொழில்நுட்ப மையம்

ஓசூர், செப்.3- ஒசூரில் ரூ.100 கோடி செலவில் உல களாவிய டிராக்டர் தொழில்நுட்ப மையத்தை  விஎஸ்டி டில்லர்ஸ்  டிராக்டர் நிறுவனம் அமைக்கிறது. விவசாய உபகரணங்கள் மற்றும்  டிராக்டர்கள் தயா ரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் விஎஸ்டி டில்லர் ஆகும். ஒசூரில் உலகளாவிய தொழில்நுட்ப மையம் நிறுவுவதன் மூலம் நிறுவனத்தின் ஆரா ய்ச்சி மேம்பாட்டு திறன்கள் அதிகரிக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, செப். 3 - தமிழ்நாட்டில் போதைப்பொருள் தாராளமாக கிடைப்பது காவல்துறை யினருக்கு தெரியுமா? தெரியாதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? போதைப்பொருள் வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பழுதடைந்த அரசுப்பேருந்து:  அதிகாரிகள் இடைநீக்கம்

கோவை, செப். 3 - கோவையில் பழுதடைந்த அரசுப் பேருந்தை ஆய்வு செய்யாமல் அனுப்பிய  2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை ஒண்டிப்புதூர் கிளை மேலாளர், உதவி பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.