tamilnadu

img

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி புதனன்று (டிச.11) நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை பல்கலைக்கழகத்தில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டத் தலைவர் ஜான்சி, மாநிலக்குழு உறுப்பினர் சுபாஷ், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், யுவஸ்ரீ மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோர் பேசினர்.