சென்னை, ஜூலை 6- திருவள்ளூர் அடுத்த பட்டரைப் பெரும்புதூரில் உள்ள அரசு பள்ளி யில் அகழாய்வில் கண்டுபிடிக்கப் பட்ட பொருட்களின் கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் பார்வை யிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பட்ட ரைப்பெரும்புதூர் கிராமத்தில் அகழ் வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றன.இந்த அகழாய்வில் 1201 தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதில் பழங்கற்காலம், இடைக்கற் காலம், மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், இரும்புக் கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடி களால் செ?யயப்பட்ட மணிகள், குது பவளம், பளிங்கு மற்றும் சுடுமண்ணா ளான பொம்மைகள் ஆகியவை முத லாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு காசு உள்ளிட்ட பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. காவி வண்ணம் பூசப்பட்ட சிவப்பு பானை ஓடுகள், கூம்பு வடிவ சாடிகள், சாடிகளின் மூடிப்பகுதிகள், மற்றும் கூரை ஓடு கள் ஆகியவையும் கிடைக்கப் பெற்றன. இந்த அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியை தொல்லியல் துறை சார்பில் பட்டரைப்பெரும்புதூரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி யில் நடத்தினர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு 2 ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பு மனி தர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒரு சில பொருட் களை புத்தகத்தில் பார்த்ததை தற்போது நேரில் பார்ப்பது சநந்தோ ஷத்தை அளிப்பதாகவும் தெரிவித்த னர். மேலும் சுடுமண்ணாளான உறை கிணறுகள், மற்றும் செங்கற்களி னால் கட்டப்பட்ட வட்ட வடிவ கிணறு ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. சங்க காலத்தைச் சேர்ந்த 3.91 மீட்டர் ஆழம் கொண்ட இது போன்ற பெரிய வடிவிலான கிணறு கிடைப்பது இதுவே முதல் முறையாகும் என்றும், இந்த கிணறு களை பாதுகாக்கப்பட்ட நினைவச் சின்னமாக்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தப் போவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.