சென்னை, செப். 5 - கேரள அரசை பின்பற்றி தமிழகத்திலும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு பாதிப்பில்லாமல் அமர்வதற்கு பொருத்தமாக இருக்கை வசதிகள் அமைக்க சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவெடுக் கப்பட்டுள்ளது. மாநில தொழிலாளர் ஆலோசனை வாரிய 68வது கூட்டம் புதனன்று (செப். 4) சென்னையில் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலா ளர் ஆணையர் இரா. நந்தகோபால், தொழிற் சங்க பிரநிதிநிதிகளாக ஜி. சுகுமாறன் (சிஐடியு), டி.எம். மூர்த்தி (ஏஐடியுசி), முரு கேசன் (ஐஎன்டியுசி), குமாரதாஸ் (பிஎம் எஸ்), வேலையளிப்போர் பிரதிநிதிகள், அரசுத்துறை இயக்குநர்கள், தொழிலாளர் துறை இணை, துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால வேலைவாய்ப்பு (பிக்சட் டேர்ம் எம் பிளாய்மென்ட்) விவகாரத்தில் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஜவுளி தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் தரவு உள்ளீடு செயல்பாட்டாளர்கள் (டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்) ஆகியோருக்கு குறைந் தபட்ச கூலி நிர்ணயித்தல் குறித்து விவா திக்கப்பட்டது. தொழிற்சங்க பதிவு சான்று தொலைந்து போனால் இதர சான்றுகள் நகல் வழங்கு வது, பெண்கள் வேலைவாய்ப்புக்க ளுக்கென்று தனியாக ஒரு விரிவான சட் டம் கொண்டு வருதல் குறித்தும் கூட்டத் தில் விவாதிக்கப்பட்டது. துணி கடைகள், திரை அரங்கம், அங்காடிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றில் நின்று கொண்டே பணியாற்றும் தொழிலாளர்கள் பணி பாதிக்கப்படாமல் அமர்வதற்கு கேரள அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதே போன்று தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும். இதற்காக தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்த அரசுக்கு இந்த கூட்டம் பரிந்துரைக்கவேண் டும் என்று கூட்டத்தில் பேசிய சிஐடியு, தொமுச, எஐடியுசி உள்ளிட்ட தொழிற் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இந்த மாநில தொழிலாளர் ஆலோ சனை வாரிய கூட்டம் சுமார் ஆறரை ஆண்டு களுக்கு பிறகு (67வது கூட்டம் 30.1.2013 அன்று நடைபெற்றது) மீண்டும் நடந்துள் ளது குறிப்பிடத்தக்கது.