தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனவுத் திட்டம் “நான் முதல்வன்”திட்டம் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலை வாய்ப்புகளையும் பெற்று வரும் நிலையில், அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், “என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்று பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமய மலை போல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி ‘நான் முதல்வன்’ என்று இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்’” என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் வெளியிட்டுள்ளார்.