மரம் விழுந்து வீடு சேதாரம்
நிவாரணம் கேட்டு சிபிஎம் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி, மே 18 - கனமழையால் மரம் விழுந்து கூலித்தொழி லாளி வீடு சேதாரம் ஆனதற்கு சிபிஎம் தளி ஒன்றியம் சார்பில் நிவாரணம் கோரியுள்ளது. சூளகிரி,ஓசூர் தேன்கனிக்கோட்டை வட்டங்க ளில் சனிக்கிழமையன்று இரவு கன மழை பெய்தது.அதில் தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகில் மதகொண்டப்பள்ளி திருநீர்த்தி பாப்பாரத் தெரு ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதி யில் அதிகாலை அங்கிருந்த மிக பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து கிளைகள் முறிந்து அருகில் இருந்த எஸ்.ரமேஷ் என்ற கூலித்தொழிலாளி வீட்டின் மீது விழுந்தது. இதனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரமேஷின் சிமெண்ட் சீட் வீடு முற்றிலும் சேதமடைந்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ், அவர் மனைவி அம்மா, மற்றும் மகன் 3 பேரக் குழந்தைகள் உட்பட 8 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ரமேஷின் 85 வயது தாய் உடல்நிலை சரியின்றி படுத்த படுக்கையாக உள்ளார். அனைவரும் ஒரே வீட்டுக்குள் குடியிருந்து வரும் நிலையில் மரம் விழுந்து வீடுகள் கடுமை யாக சேதம் அடைந்த போதும் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் அறிந்து சிபிஎம் தளி ஒன்றிய செயலாளர் ஆர்.நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா, அப்பகுதி கிளைச் செயலாளர் முருகேஷ் சென்று பார்வையிட்டனர். வீடு சேதம் அடைந்த ரமேஷ் குடும்ப உறுப்பினர்கள் 8 பேரும் குடியிருக்க வீடு இல்லாமல் செய்வது அறியாது தவித்து வருகின்றனர். இயற்கை பேரிடரால் மரம் விழுந்து முற்றி லும் சேதம் அடைந்த ரமேஷ் வீட்டை தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக புதிதாக கட்டித்தர வேண்டும்,சேதமடைந்த வீட்டு உபயோக பொருட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தளி ஒன்றிய குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.