கர்நாடகாவில் நடைபெறும் மதவெறி பிரச்சாரத்திற்கு எதிராக அணிதிரளவேண்டுமென கூறியுள்ளார் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியகூடாது என சங்-பரிவார மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள பிஇஎஸ் பொறியல் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை வழிமறித்து ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தனது முகநூல் பக்கத்தில்,
கர்நாடகத்தில் மாணவர்கள் மத்தியில் மதவெறி நெருப்பைபற்ற வைத்து குளிர்காய்கிறது ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்.
எஸ்எப்ஐ களத்திலே நிற்கிறது.அஞ்சாதசிங்கமென பர்தாவோடு முழக்கமிடுகிறார் ஒருமாணவி. காவிக் கூட்டமோ தேசியக்கொடியை கிழித்தெறிகிறது.
தியாகத்தில் விளைந்த தேசியக்கொடியை தொடுவதற்கு கூடஆர்எஸ்எஸ் பாஜககும்பலுக்கு எந்த அருகதையும் இல்லை-
ஒன்றுபடுவோம்! மதவெறிக்கெதிராக அணிதிரள்வோம் என அதில் கூறியுள்ளார்.