tamilnadu

img

ஜாமீன் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் வெளிவருவதை உறுதி செய்ய - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,டிசம்பர்.09- ஜாமீன் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் சிறையிலிருந்து வெளிவருவதை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணைத் தொகை செலுத்த முடியாததால் பல கைதுகள் ஜாமீன் கிடைத்திடும் வெளியே வரமுடியாமல் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் .இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தானே முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த விசாரணையில் 153 விசாரணைக் கைதிகள், 22 தண்டனைக் கைதிகள் வெளிவர இயலவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் சிறையிலிருந்து வெளிவருவதை உறுதி செய்யச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.