tamilnadu

கேட்பது ஒன்று... கிடைத்தது ஒன்று... மே மாதத்தில் 1,413 பிரசவங்கள்

அரசு மருத்துவமனை தகவல்

மதுரை, ஜூன் 12- மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை யில் கொரோனா தொற்று பரவல் காலம் முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை எத்தனை நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது என்ற நாள் வாரியான விப ரம் என்பது பரம ரகசியமாக வைக்கப்பட் டுள்ளது. போனால் போகிறது என ஒருநாள் பொத்தாம் பொதுவாக ஒரு விவரத்தை தமி ழக அரசு கொடுத்தது. அதில் தெளிவில்லை. நாள் வாரியான விபரம் இல்லை. தரக் கூடாது என்பதில் தமிழக அரசு “சாதனை யாக” நிற்கிறது.

இந்த நிலையில் மதுரை அரசு இராசாஜி மருத்துவமனையில் மகப்பேறு துறையில் கொரோனா காலத்தில் அருகிலுள்ள திண் டுக்கல், தேனி, விருதுநகர். இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 28 கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் களில் எவ்வித சிக்கலுமின்றி 14 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது. இதில் ஒருவருக்கு சுகப்பிரசவம், 13 கர்ப்பி ணிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றுள்ளது. ஐந்து ஆண் குழந்தைகள், ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மீண்டும் செய்யப் பட்டு கொரோனா தொற்று இல்லை என் பது உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் மட்டும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டு வந்த கர்ப்பிணி களுக்கு சிறப்புச் சிகிச்சையளிக்கப்பட்டது. மே மாதம் 1,413 பிரசவங்கள் நடைபெற் றுள்ளது. 9,031 சுகப்பிரசவம் (64%), 510 பேருக்கு (36%) அறுவை சிகிச்சை மூலமாக வும் பிரசவம் நடைபெற்றுள்ளது. கொரோனா சிறப்பு சிகிச்சையில் பத்து மகப்பேறு மருத்துவர்கள், பத்து மயக்கவியல் நிபு ணர்கள், பச்சிளங் குழந்தை மருத்துவர்கள், செவியர்கள் சுகாதாரப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்துள்ளனர்.