சென்னை, மே 21- அரசின் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற மாற் றுத் திறனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச் சகத்திடம் இருந்து அனைத்து அரசு செயலாளர் களுக்கும் அனுப்பப்பட்ட நேர்முக கடிதத்தில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் மாற்றுத்திறனாளிகள் பயன் பெற தங்களின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை எண் அல்லது இணையதளத்தில் அதற்கான பதிவு எண்களை மாற்றுத் திறனாளி என்பதற்கான மருத்துவ சான்றிதழுடன் சமர்ப்பிக்க 1.4.2023 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் எண் பெறுவது, மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை எண் பெறுவது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஆகவே, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் எண் கோரி விண்ணப்பிக்கலாம், தனித்துவம் வாய்ந்த அடை யாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளி களிடம் இருந்து விண்ணப்பங் களை பெற்று ஆவ ணங்களை பதிவேற்றம் செய்வதற்கும், தொடர்ந்து அவர்கள் திட்டங்களில் பயன் பெறுவதற்கும் மே திட் டங்களில் பயன் பெறுவதற்கும் மே மாதத்திற்குள் சம்பந் தப்பட்ட அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.