சென்னை, மே 13- பொது மாறுதல் கலந் தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், தற்போது பணி புரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதில் கூறப்பட்டிருப்ப தாவது: அரசுப் பள்ளிகளில் பணிபுரி யும் அனைத்து வகையான ஆசி ரியர்களின் 2024- 25 ஆம் ஆண் டிற்கான பொது மாறுதல் கலந் தாய்வு மற்றும் பதவி உயர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த கலந்தாய்வு, மே 24 முதல் ஜூன் 30 வரை எமிஸ் இணையதளம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள், தங்க ளின் விண்ணப்பங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரி யர்கள், தற்போது பணிபுரியும் பள்ளியில் ஜூன் 1 ஆம் தேதி யன்று ஓராண்டு பணி முடித்தி ருக்க வேண்டும். மாறுதலுக்கு விண்ணப் பிக்கும் ஆசிரியர்கள் விண் ணப்பங்களை தலைமை ஆசிரி யர் ஒப்புதல் அளித்த பிறகு, ஒரு பிரதியை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மாறுதல் கோரும் விண் ணப்பத்தில் முன்னுரிமை கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கு உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண் டும். மேல்நிலைப் பள்ளி உயிரி யல் பாட பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பத்தில் தாம் பயின்ற நகரம், மேஜர் பாடம் பற்றி குறிப்பிட வேண் டும். மேலும் எந்த பணியிடத்தில் பணிபுரிகிறார் என்ற விவரத் தையும் குறிப்பிடப்பட வேண்டும்.
கணவன்- மனைவி முன்னு ரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர் கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம், பள்ளி, அரசு மற் றும் அரசுத் துறையின் நிர்வா கத்தின் கீழ் உள்ளதா என்ற விவ ரத்தையும், அதற்கு உரிய அலு வலரிடம் பெறப்பட்ட சான்றை யும் பதிவேற்றம் செய்ய வேண் டும். கணவன் - மனைவி பணி புரியும் இடத்திற்கு தொலைவு 30 கி.மீ மேல் உள்ளதை சரி பார்த்து உறுதி செய்ய வேண்டும். மன மொத்த மாறுதல்கள் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல், துறை மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங் கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும்.
மாவட்டம் விட்டு மாவட்டம் கோரி விண்ணப்பித்துள்ள ஆசி ரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட் டத்தை தவிர்த்து பிற மாவட் டத்தில் உள்ள காலிப் பணி யிடத்தையே தேர்வு செய்ய வேண்டும். உள் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், உள் மாவட்டத்திற்குள் நடை பெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்று விட்டால், மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வராமல் தாமதமாக வந்தாலும் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.