சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5, 6 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியார்மயமாக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பிரச்சாரம் மேற்கொண்டது. இதனையொட்டி, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவைசந்தித்து மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வி.தனலட்சுமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் ஜெ.பார்த்திபன், 98வது வார்டு கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி ஆகியோர் மனு அளித்தனர்.