tamilnadu

img

குப்பை அள்ளும் பணி தனியார்மயம்!

குப்பை அள்ளும் பணி தனியார்மயம்!

மண்டலம் 5,6ல் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 14 - மண்டலம் 5, 6 ஆகிய வற்றில் குப்பை அள்ளும் தனியார்மயமாக்குவதை கண்டித்து புதனன்று (மே 14) ரிப்பன் மாளிகை வளா கத்தில் தூய்மைப் பணி யாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி யில் ஒவ்வொரு மண்டல மாக குப்பை அள்ளும் பணி தனியர்மயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது, 5, 6  மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி ஸ்மித், உபேசர், என்விரோ ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப் பட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.277 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள் ளது. இதனை கண்டித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் இந்த போராட்டத்தை நடத்தி னர். முதலமைச்சர் வாக்கு றுதி அளித்தப்படி, என்எம் ஆர், என்யுஎல்எம், மலே ரியா, எஸ்எச்ஜி-அண்டை வீட்டுக் குழு ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எல்எம்வி, எச்எம்வி மற்றும் பிஓவி வாகனங்களை தர மான உதிரி பாகங்களை கொண்டு பராமரிப்பு செய்ய வேண்டும். குப்பை அள்ளும் தொழிலாளிகளை அத்துக் கூலியாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். அப்போது செய்தி யாளர்களிடம் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனி வாசுலு கூறியதாவது: முதலமைச்சரின் கொள த்தூர் தொகுதி, மேயர் உறுப் பினராக உள்ள வட்டம் உள்ளிட்ட 30 வட்டங்களில் குப்பை அள்ளும் பணி தனியார்மயமாக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே என்யுஎல்எம் திட்டத் தில் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு அதிக பணிப் ப்பளு தரப்படுகிறது. பெண் தொழிலாளிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக் கப்படுகின்றனர். 45வது வார்டில் பிஓவி வண்டியை சார்ச் போடும்போது மின்சா ரம் தாக்கி குமார் என்ற தொழி லாளி உயிரிழந்தார்.  தனி யார்மயத்தால் தொழி லாளர்களுக்கு பாது காப்பற்ற நிலை உள்ளது. தனியார்மயத்திற்கு எதி ராக தொடர்ந்து போராடி வருகிறோம். இவற்றை யெல்லாம் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளா மல் உள்ளது. தூய்மைப்பணியில் 98 விழுக்காடு தலித் மக்கள் உள்ளனர். மொத்த தொழி லாளர்களில் 4 ஆயிரத்து 722 பேர் நிரந்தர தொழிலாளி களாகவும், 4 ஆயிரத்து 992 பேர் ஒப்பந்த தொழிலாளர்க ளாகவும் உள்ளனர். தொழி லாளர்களை அத்துக் கூலிகளாக வைத்துள்ளது. பணி நிரந்தரம் செய்ய மறுக்கின்றனர். தனியார் மயமாக்கினால் தூய்மை பணி சரியாக நடக்கும் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. தனியாரை மையப்படுத்தி மாநகராட்சி கொண்டு 13 திட்டங்கள் தோல்வியடைந்து கைவிடப்பட்டுள்ளது. உதார ணமாக சிங்கார சென்னை திட்டம், குப்பை இல்லா நக ரம், குப்பை தொட்டியை மறைத்து வைப்பது, சாலை  விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சைக்கிள் திட்டம், மழைநீர் கால்வாய், மக்கும் குப்பை - மக்காத குப்பை பிரிக்கும் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்து கைவிடப் பட்டுள்ளது. குப்பை அள்ளும் பணி யில் ஓனிக்ஸ், நீல்மெட்டல் பனால்கா, ராம்கே நிறு வனங்கள் வந்தன. தற்போது பெயரை மாற்றி அர்பேசர், உபேரோ, ஸ்மித் என பெயரை மாற்றிக்கொண்டு வருகிறார்கள். இத னால் மக்கள் பணம் விரைய மானது. தொழிலாளர் ர்களுக்கும் எந்த பயனும் இல்லை. பூங்கா, மைதா னத்தை தொடர்ந்து சுடுகாட் டையும் தனியாருக்கு கொடுத்துள்ளனர். தனி யார்மயத்தால் ஊழல்தான் அதிகரித்துள்ளது. மக்க ளுக்கும், மாநகராட்சிக்கும் நட்டம்தான் ஏற்படுகிறது. எனவே, தனியார்மயத்தை முழுமையாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப்போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜெ.பட் டாபி தலைமை தாங்கினார். சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் சிவக்கு மார், செங்கொடி சங்கத்தின் பொருளாளர் ராஜேந்திரன், துணைப்பொதுச் செயலா ளர்கள் ஜி.முனுசாமி, டி.ராஜன், துணைத்தலை வர்கள் கே.தேவராஜன், பி.சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.