tamilnadu

குடியிருப்புகளை அகற்றும் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் தமிழக அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, டிச. 17 - குடியிருப்புகளை அகற்ற பிறப்பிக்கப்படும் தீர்ப்புகளை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலி யுறுத்தி உள்ளார்.

சிபிஎம் தென்சென்னை மாவட்ட 24வது மாநாடு டிச.14-15 தேதிகளில் சைதாப்பேட்டையில் நடை பெற்றது. இதனையொட்டி திங்களன்று (டிச.16) கோட்டூர் மார்க்கெட்டில் செந்தொண்டர் அணி வகுப்பு, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜி.ராம கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

கால்வாய் கரையோரம் பன்னடக்கு மாளிகைகளை அனுமதிக்கும் அரசு, ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை மட்டும் அகற்றுவது ஏன்? பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்கிறது. அதேபோன்று, குடி யிருப்புகளை அகற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்த்தும் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். குடி யிருப்புகளை அகற்ற மார்க்சிஸ்ட் கட்சி  அனுமதிக்காது. ஏழைகளின் பக்கம்தான் நிற்போம்.

சர்வாதிகாரத்தை நோக்கி

2 மக்களவைத் தொகுதி களை கொண்ட திரிபுரா மாநிலத்திற்கு கூட ஒரேகட்ட மாக தேர்தல் நடத்த முடி யாத ஒன்றியஅரசு, ஒரே நாடு ஒரேதேர்தல் திட்டத்தை கொண்டு வரு கிறது. அடுத்ததாக ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற சர்வாதிகாரத்தை கொண்டு வர முயற்சிக்கின்றன. இவற்றை மார்க்சிஸ்ட் கட்சி முறிய டிக்கும்.

சென்னையில் போராட் டம், ஊர்வலம் நடத்த அனு மதி மறுக்கப்படுகிறது. கருத்துச்சுதந்திரம் அடிப் படை உரிமை. அதை மறுக்கக் கூடாது. ஒன்றிய அரசை எதிர்த்து போராடும் போது மாநில அரசோடு நிற்போம். அதேசமயம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முன்னணியில் நிற்போம். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சாம்சங் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்து தரா விடில், அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்  வோம்.

இவ்வாறு அவர் பேசி னார்.

ஆர்.பத்ரி

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி பேசு கையில், “திரு மணத்திற்கு ஈவன்ட்  மேனேஜ்மண்ட் செய்வது போல், அரசியலிலும் செய்கின்றனர். மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாமல் மசூதியை தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். நாடாளு மன்றத்தின் கீழ் கோவில் இருந்தது என்றால் அதை இடிப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.

ஆர்.வேல்முருகன்

மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் பேசுகை யில், “குடியிருப்புகள் மக்க ளின் அடிப்படை உரிமை. அரசு அதை திட்ட மிட்டு பறிக்கிறது. குடி யிருப்புகளை அகற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து வகையான நிலங்களையும் வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்றார்.
ஏ.பாக்கியம்

மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.பாக்கியம் பேசுகை யில், “சென்னை நகரின் தேவைக்கு ஏற்ப மருத்துவ மனைகள் இல்லை. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் ஜி.வெங்க டேசன் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, பகுதி நிர்வாகிகள் ஒய்.இஸ்மாயில், ஆர்.பாரதி, வி.கவிதா உள்ளிட்டோர் பேசினர். கோட்டூர்புரம் கிளைச் செயலாளர் ஏ.பிரகாஷ் நன்றி கூறினார். முன்னதாக பகுதிக்குழு உறுப்பினர் ஏ.சுந்தர் வரவேற்றார்.