இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் ‘வாழை’ திரைப்படம், மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் பாட்டையும், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஆளும் வர்க்கச் சுரண்டலையும் உருக்கமான முறையில் காட்சிப்படுத்தியுள்ள இந்த திரைப்படம், படத்தைப் பார்ப்போரின் மனச்சாட்சியையும் தட்டியெழுப்புவதாக அமைந்துள்ளது. இத்தகைய ஒரு அருமையான படைப்பை திரைமொழியில் கொடுத்ததற்காக, ‘வாழை’ திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல், ராகுல் ஆகியோரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேரில் பாராட்டி கவுரவித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி உடனிருந்தார்.