tamilnadu

மே 17 முதல் கொடைக்கானல் மலர் கண்காட்சி

சின்னாளபட்டி, மே 13- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான லில் 61-ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா மே 17-ஆம் தேதி முதல் 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வில் நடைபெறும் விழாவில் தோட்டக் கலைத்துறை மூலம் மலர்க்கண்கா ட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடை விழாவும் நடத்தப்படவுள்ளது.  இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சி கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம் பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

மேலும், நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களுக்கு, சுற்றுலா அலுவலர் சுற்றுலா அலுவலகம், கொடைக்கா னல்-624101 என்ற முகவரியில் நேரிலோ, 04542-241675 என்ற அலுவலக தொலைபேசி எண் மற்றும் 9176995867 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ மற்றும் கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநரை 9092861549 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்.

;