சென்னை, ஆக.31- சென்னையின் திடீர் மழையால் பார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்கான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (எப்ஐஏ) சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த அவகாசம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, கால நீட்டிப்பு கேட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்தது. இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், சனிக்கிழமை(ஆக.31) இரவு 8 மணிக்குள் சான்று பெற வேண்டும்.
இல்லையென்றால் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்ட மைப்பு நடத்திய ஒரு மணி நேர ஆய்வுக்கு பிறகு, தரச் சான்று வழங்கியது. இதையடுத்து, அனைவரும் ஆவலு டன் எதிர்பார்த்து காத்திருந்த தெற்காசியாவின் முதல் இரவு நேர பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முறைப்படி போட்டியை துவக்கி வைத்தார்.
விளையாட்டு அதிகாரிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணைப்படி, இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கின. இரவு 11 மணிக்கு போட்டிகள் நிறைவு பெற்றன. ஞாயிற்றுக்கிழமை (செப்.1) தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.