12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக. 1 முதல் அசல் மதிப்பெண் சான்று!
சென்னை, ஜூலை 29 - 2024 மார்ச்சில், 12-ஆம் வகுப்பு பொ துத்தேர்வு எழுதிய மாணவர்கள் (மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவு உட்பட) தங்களின் அசல் மதிப் பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 1 முதல் பள்ளி களில் பெற்றுக் கொள்ள லாம் என்று தமிழக அர சுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத் திலும் அசல் மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம். மேலும். விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத் தில் அறிந்து கொள்ளலாம்.
சிறந்த மகப்பேறு மருத்துவர்களில் தமிழ்நாடு முன்னணி
அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு
சென்னை, ஜூலை 29 - தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென் னையில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் மகப் பேறு மரண விகிதம் கடந்தாண்டு ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக இருந்தது. அது தற்போது 44.5 ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஒன்றிய அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளது.
சுகப்பிரசவத்தை அதிகரிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜி யத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு மரணம் பூஜ்ஜி யத்தை எட்டியுள்ளது. தாய்மார்களுக் கான மருத்துவ கட்டமைப்பு மேம்படுத் தப்பட்டு இருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் மகப்பேறு எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்குப் பருவமழை 55 விழுக்காடு கூடுதல்!
சென்னை, ஜூலை 29- தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியா குமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட் டங்கள் மழைப் பொழிவை பெறும்.
தற்போது, நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலை யில், கர்நாடகம், கேரளத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டி லும் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
அதன்படி ஜூன் 1 முதல் ஜூலை 29 வரை தமிழ்நாட்டில் 179.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 115.6 மி.மீ. ஆகும். ஆகவே தற்போது வரை தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை 55 விழுக்காடு அதிக மாக பெய்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பியது!
காஞ்சிபுரம், ஜூலை 29- காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக வைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ளார். துணை மேய ராக காங்கிரசை சேர்ந்த குமரகுரு நாதன் உள் ளார். மாநகராட்சியில் திமுக 33 , காங்கிரஸ் 1, விசிக 1, அதிமுக 8, பாமக 2, தமாகா, பாஜக தலா 1 சுயேட்சை 4 என உறுப்பினர்கள் உள்ள னர்.
இந்நிலையில், மேயர் மகாலட்சுமி யுவராஜூக்கு எதிராக எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து, திமுக கவுன்சிலர்கள் சிலரும் போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து, திங்களன்று (ஜூலை 29) நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக் கெடுப்பு நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
அதன்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. ஆனால், கவுன்சிலர்கள் யாருமே வரவில்லை. மேயரை பதவி நீக்கம் செய்ய 5-இல் 4 பங்கு கவுன்சி லர்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மா னம் மற்றும் அது தொடர்பான விவாதம், வாக்கெடுப்புக்கு ஏற்கப்படவில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.