tamilnadu

img

சாலையை சீரமைக்க கூடுதல் தொகைக்கு டெண்டர் விடுவதா?- வைகோ எம்.பி. கேள்வி....

சென்னை:
தஞ்சாவூரில், நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரிலும், பராமரிப்பு என்ற பெயரிலும் பட்டியலில் இணைத்து ரூ.1,150 கோடிக்கு டெண்டர் விடுவதற்கு காரணமானவர்கள் யார்? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள நெடுஞ் சாலைத் துறையில் டெண்டர் விடுவதில் நடைபெறும் ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கின்றது.தஞ்சாவூரில் சாலைப் பணிகளுக்கு ரூ.1,150 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை மாதம் பிபிஎம்சி டெண்டர் விடப்பட்ட போது, மிகவும் நல்ல நிலையில் உள்ள சாலைகள் பராமரிப்புக்காக இந்த டெண்டரில் சேர்க்கப் பட்டதையும், டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு இந்தப் பணிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் நெடுஞ் சாலைத்துறைச் செயலாளருக்குச் சுட்டிக் காட்டி அறப்போர் இயக்கம் புகார் செய்தது. எனவே அந்த டெண்டர் ரத்து செய்யப் பட்டது. ஆனால் அதே பிபிஎம்சி டெண்டர் வேறு ஒரு பெயரில் இரண்டு டெண்டராகப் பிரிக்கப்பட்டது.

அதில் ஒன்று 208 கி.மீ. சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு ரூ.656 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப் பட்டு, நவம்பர் 18 ஆம் தேதி திறக்கப்பட்டது. இன் னொன்று 254 கி.மீ. சாலை ரூ.494 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, நவம் பர் 19 ஆம் தேதி திறக்கப் பட்டது.ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் இ-டெண்டர் முறை என்பதால், இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆதாரங்களுடன் நெடுஞ் சாலைத் துறைச் செயலாளருக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்தும், குறிப்பிட்ட அந்த இரண்டு நிறுவனங்க ளுக்கு ரூ.1,150 கோடி டெண்டர் ஒதுக்கீடு செய்யப் பட்டதில் பின்னணியில் உள்ள ஊழல் நபர்கள் யார்?தஞ்சாவூரில், நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரிலும், பராமரிப்பு என்ற பெயரிலும் பட்டியலில் இணைத்து ரூ.1,150 கோடிக்கு டெண்டர் விடுவதற்கு காரணமானவர்கள் யார்? என்று விசுவரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி பதில் கூற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;