விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவின் 103வது பிறந்த நாளான திங்களன்று (ஜூலை 15) சிபிஎம் சைதாப்பேட்டை பகுதிக்குழு சார்பில் உணவு தானம் வழங்கப்பட்டது. கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் ஒய்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் க.பீம்ராவ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், ம.சித்ரகலா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் உணவை வழங்கினர்.