எடப்பாடி பழனிச்சாமி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும்!
பேரவைத் தலைவர் அறிவுரை
எடப்பாடி பழனிச்சாமி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும்! பேரவைத் தலைவர் அறிவுரை
இதையடுத்து அவர்களை பேர வைத் தலைவர் அப்பாவு பலமுறை எச்ச ரிக்கை செய்தார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளி நடப்பு செய்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் எ.வ. வேலு, சட்டமன்றத்தில் கேள்வி நேரம் தான் மிக முக்கியமானது. அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்சிப் பாகு பாடு இன்றி சமமான வாய்ப்பு தரப்படும். அந்த நேரத்தைப் பயன்படுத்தி உறுப்பி னர்கள் தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர முடியும். கேள்வி நேரம் முடிந்ததும் ஒத்தி வைப்பு மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டுவர பேரவை தலைவரி டம் அனுமதி கோரலாம். இதில் பெரும்பாலும் கவன ஈர்ப்புத் தீர்மா னங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மிக மிக முக்கியமான பிரச்சனை என்றால் ஒத்திவைப்பு தீர்மானம் அனுமதிக்கப் படும். ஆனால் அதிமுக உறுப்பினர் களும் எதிர்க்கட்சி தலைவரும் தொட ர்ந்து இரண்டாவது நாளாக கேள்வி நேரத்தை நடத்த விடாமல் குழப்பம் விளைவித்து வருவது குறித்து பேரவை தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு விளக்கம் அளித்த பேரவை தலைவர் மு. அப்பாவு, அதிமுக உறுப்பி னர்கள் கேள்வி நேரத்தில் மக்கள் பிரச் சனை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதை விரும்பவில்லை. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப் பாடி பழனிச்சாமிக்கு தற்போது ஏற் பட்டிருக்கும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் சட்டமன்ற நேரத்தை வீண டிப்பது அநாகரிகமான செயலாகும். இனிமேலாவது எதிர்க்கட்சித் தலைவ ரும் அதிமுக உறுப்பினர்களும் நாகரிக மாக நடந்து கொள்ள வேண்டும். அப் படிச் செய்யத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை செய்தார்.
குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா?
ராமதாஸ், அன்புமணிக்கு
திமுக எம்எல்ஏக்கள் சவால்
சென்னை, ஜூன் 22 - கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர் புள்ளதாக திமுக எம்எல்ஏ-க்களான உதய சூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது பாமக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவை வளா கத்திற்கு வெளியே திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்தி கேயன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறிய தாவது:-
உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு எங்க ளின் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், கள்ளச்சாராயம் குடித்து பலி யானோரின் குடும்பத்தை வைத்து அரசி யல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்பு மணி ராமதாஸ். இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென் றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்பு மணி. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விலக தயார். அதேபோல் அவர் கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறி னால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா? சாராய வியாபாரி கண் ணுக்குட்டி திமுக பிரமுகர் இல்லை. வீட்டில் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டி ருந்தால் கண்ணுக்குட்டி திமுக பிரமுக ராகி விடுவாரா? ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்த தில் ஊழல் புகார் எழுந்தது. அன்றைக்கு சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சிபிஐ விசாரணை வேண்டாம் என்று நீதிமன்றத்துக்கு சென்றவர் ராம தாஸ்.
இன்றைக்கு, கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். சிபிசிஐடி விசார ணைக்கும் உத்தரவிட்டு காவல்துறை யினரும் விசாரணையை துவக்கி விட்ட னர். இந்த நிலையிலும் சிபிஐ விசா ரணை தான் வேண்டுமென்று வற்புறுத்து வது ராமதாஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது” என்றும் குறிப் பிட்டனர்.